
புதுச்சேரி: புதுச்சேரி அருகே பிறந்தநாளிலேயே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மணிமாறன் (எ) டூம் மணி (34). ரவுடியான இவர் மீது முத்தியால்பேட்டையைச் சேர்ந்த அன்பு ரஜினி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EY6H0bA
0 Comments