Crime

சென்னை: அம்பத்தூர் மண்ணூர்பேட்டையை சேர்ந்த இந்து பிரமுகர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான சையது அபுதாஹீர் கள்ளத் துப்பாக்கி விற்பனை செய்த வழக்கில் கைதாகியுள்ளதால், இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கொளத்தூர் உதவி ஆணையரின் தனிப்படை பிரிவு போலீஸாருக்கு புழல் மற்றும் காவாங்கரை பகுதியில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்படும் மதுபானங்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸார் புதன்கிழமையன்று சம்மந்தப்பட்ட பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வந்த யோகேஷ் தலைமறைவான நிலையில், அங்கிருந்த மதுபாட்டில்களை மட்டும் தனிப்படை போலீஸார் பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/isAMnbK

Post a Comment

0 Comments