
ஓசூர்: ஓசூரில் நடக்கும் 'லங்கர்' கட்டை சூதாட்டத்தால் அப்பாவி தொழிலாளர்கள் பணத்தை இழக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப் பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழா மற்றும் தெருக் கூத்து நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியில் பணம் வைத்து விளையாடும் ‘லங்கர்’ கட்டை சூதாட்டம் நடை பெற்று வருகிறது. இச்சூதாட்டம் கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏழை மற்றும் விவசாயிகளைக் குறி வைத்து நடத்தப்படுகிறது. இதில், பலரும் பணம், இருசக்கர வாகனங்களை இழந்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/V84kFT6
0 Comments