
மதுரை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிறுவனம், பொதுமக்களிடம் கூடுதல் வட்டி தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி புகாரில் சிக்கியது. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இந்த வழக்கில் 10-க்கும் மேற்பட்டோரை காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மேற்பார்வையில் டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த நிர்வாக இயக்குநர் கமலக்கண்ணன், அவரது சகோதரர் சிங்கார வேலன் ஆகியோர் சென்னையில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
நியோ-மேக்ஸ் விவகாரத்தில் முதலீட்டாளர் களுக்குப் பணம் மற்றும் நிலம் வழங்கு வதற்காக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்க உத்தரவிடக் கோரி நிறுவன இயக்குநர்கள் பழனிச்சாமி, பாலசுப்பிரமணியன் ஆகி யோர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். எங்கள் மீது புகார் அளித்தோருக்கு நிலங்களை வழங்கி பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புகிறோம். இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து உத்தரவிட வேண்டும், எனக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அரசுத் தரப்பில், விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்த நேரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பது தேவையற்றது என எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/azh3EOv
0 Comments