Crime

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறித்த சம்பவம் நடந்து 15 நாட்களாகியும், இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

திருப்புவனத்திலிருந்து சிவகங்கைக்கு செப்.8-ம் தேதி இரவு அரசு நகரப் பேருந்து வந்தது. வீரவலசை விலக்கு அருகே வந்த அந்த பேருந்தை, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வழிமறித்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள், பேருந்தில் ஏறி வாளை காட்டி மிரட்டி நடத்துநர் பெரியசாமியிடம் (45) இருந்து பணப் பையை பறித்துவிட்டு தப்பினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dJL6zSP

Post a Comment

0 Comments