
சென்னை: தனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கார் ஓட்டுநர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார் (28), பழனியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சேமிப்பு கணக்கை வைத்துள்ளார். கடந்த 9-ம் தேதி அவரது சேமிப்பு கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்டது. பின்னர், அந்த தொகை அவரது கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0ZjkUlc
0 Comments