Crime

சென்னை: சென்னை தண்டையார்பேட்டை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் நாகராஜ் (34). புளியந்தோப்பு காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராக பணிபுரிகிறார். இவர்,அந்தப் பகுதியில் உள்ள கங்கையம்மன் கோயில் திருவிழா பாதுகாப்புப்பணிக்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் காவலராக பணிபுரியும் நாசர் என்பவரும் சென்றார்.

இருவரும் வ.உ.சி.நகர் நகரில் தகராறு செய்து கொண்டிருந்த கும்பலை கலைந்து போகும்படி கூறினர். ஆனால் அங்கிருந்த 3 பேர் காவலர்களைத் தாக்கினர்.தாக்குதலில் பலத்த காயமடைந்தநாகராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றார். காவலர் நாசருக்கு லேசான காயம் ஏற்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xVhqsKA

Post a Comment

0 Comments