
காஞ்சிபுரம்: முகநூல் நட்பு மூலம் தாயிக்கு அறிமுகம் ஆன ஒருவர் அவரது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணையதள நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பதுடன் தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் கொடுப்பது, பழகுவது ஆபத்தில் முடியும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (40). இவருக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணவரை இழந்த இளம்பெண் ஒருவரின் நட்பு முகநூல் மூலம் கிடைத்துள்ளது. அந்தப் பெண் கணவரை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்ததால் தினேஷ்குமார் ஆதரவாக இருப்பார் என்ற நம்பிக்கையில் பழகியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VjJbiLn
0 Comments