Crime

கோவில்பட்டி: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஃபைனான்சியர் விளாத்திக்குளம் அருகே காருடன் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக, கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பல்லாக்குளம் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை கார் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, காரின் பின் பகுதியில் கருகிய நிலையில் ஓர் உடல் கிடந்தது. தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன், டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் போலீஸார் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கிடந்த செல்போன் மற்றும் காரின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fo6NJUG

Post a Comment

0 Comments