Crime

திருவள்ளூர்: அம்பத்தூரில் வீட்டு படுக்கை அறையில் குளிர்சாதன இயந்திரம் தீப்பற்றி எரிந்ததில் புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் இருவரும் நேற்று உயிரிந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த மேனாம்பேடு, ஏகாம்பரம் நகர், காளிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஹகிலா (50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இவரது கணவர் ரஹமத் காலமாகிவிட்டார். இவர்களது மகள் நஸ்ரின் (16) அதே பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஹகிலா, தனது மகள் நஸ்ரினுடன் படுக்கையறையில் ஏசி போட்டு தூங்கியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/56Pd1on

Post a Comment

0 Comments