
மேட்டூர்: மேட்டூர் அருகே நங்கவள்ளி பேக்கரியில் பிறந்தநாளுக்கு வாங்கிய கேக்கை சாப்பிட்ட 2 வயது சிறுமி உள்பட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி அடுத்த கரட்டுபட்டி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (31). கூலி தொழிலாளியான இவரது 2 வயது பெண் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக, மாரிமுத்துவின் உறவினர் ஒருவர் நங்கவள்ளியில் உள்ள பேக்கரியில் பிறந்தநாள் கேக் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிறந்தநாளை கொண்டாடிய பிறகு, முதலில் 2 வயது சிறுமி உள்பட 6 சிறுவர்கள் கேக் சாப்பிட்டனர். பின்னர், வீட்டில் இருந்த பெற்றோர், உறவினர்கள் 6 பேர் கேக் சாப்பிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pdeVGfj
0 Comments