Crime

தருமபுரி: பட்டா நிலத்தில் இருந்து சந்தன மரம் வெட்டிக் கடத்திய இருவருக்கு தருமபுரி மாவட்ட வனத்துறை ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

தருமபுரி மாவட்டம் இண்டூர் காவல் நிலைய போலீஸார் நாகர்கூடல்-பண்டஅள்ளி சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களின் பேச்சும், நடவடிக்கையும் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே, அவர்கள் வைத்திருந்த பையை போலீஸார் சோதனையிட்டபோது அதில் சந்தன மரத்துண்டுகள் 13 எண்ணிக்கை அளவில் இருப்பது தெரிய வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PKTbtN7

Post a Comment

0 Comments