Crime

சென்னை: சென்னை முகப்பேரை சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த மாதம் 27-ம் தேதி ஒரு பெண்ணுடன், அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வந்த ஒருவர், போலீஸ் என கூறி, அந்த இளைஞரை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் ரூ.15 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு, விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையம் வர வேண்டும் என கூறி சென்றுள்ளார். இதையடுத்து, மறுநாள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என அந்த இளைஞரை மிரட்டி, மீண்டும் ரூ.65 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WV0ZRad

Post a Comment

0 Comments