
சென்னை: சென்னை சூளைமேடு, சக்திநகர் 4-வது தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகரன் (46). ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலைஇவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த 3 பேர் கும்பல், சந்திரசேகரனைத் தாக்கி அவரை காரில் கடத்திச் சென்றது. அவரது ஆட்டோவையும் எடுத்துச் சென்றது.
இதுகுறித்து சந்திரசேகரின் உறவினர்கள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துகடத்தல் கும்பலை பின் தொடர்ந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zb9eA7C
0 Comments