Crime

சென்னை: சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபலரவுடி ஆற்காடு சுரேஷ் (49), கடந்த 18-ம்தேதி வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மாலையில் பட்டினப்பாக்கம் சென்றார். அங்கு தனது நண்பர் மாதவனுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 7 பேர் கும்பல், சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. தாக்குதலில் மாதவனும் காயம் அடைந்தார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கொலை தொடர்பாக திருவள்ளூர்மாவட்டம் அரண்வாயல் கிராமத்தை சேர்ந்தசந்துரு என்ற சைதாப்பேட்டை சந்துரு (29), சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் யமஹா மணி என்ற மணிவண்ணன்(26), அரக்கோணம் ஜெயபால் (63) ஆகிய3 பேர் கைது செய்யப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WrLmEs3

Post a Comment

0 Comments