Crime

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை காதலித்த இளைஞரை, தோப்புக்கு வரவழைத்து கூலிப்படை மூலம் கொலை செய்து, உடலை ஆற்றில் வீசிய தந்தை, மகன், மகள் உட்பட 8 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தஞ்சாவூர் அருகே திருமலைசமுத்திரம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவரது இளைய மகன் சக்திவேல்(23). தனியார் பால் நிறுவனத்தில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 6-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சக்திவேல் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது அண்ணன் சரவணன் அளித்த புகாரின் பேரில் வல்லம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/s2A0zKU

Post a Comment

0 Comments