
சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனை செய்து வந்ததாக, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கோடம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை, பதுக்கல், கடத்தலை தடுக்கமாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சென்னையில் `போதை தடுப்புக்கான நடவடிக்கை' என்ற சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணிகளை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l4DEC30
0 Comments