
மதுரை: மதுரை சரக டிஐஜியாக ஆர்.வி. ரம்யா பாரதி நேற்று அவரது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை சரகத்துக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 88 சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. மதுரை, விருதுநகர் மாவட்ட எஸ்பிக்களை மேற்பார்வையிடுவதே டிஐஜியின் முக்கிய பொறுப்பு. சட்டம், ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்படும். பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்க முன்னுரிமை அளிப்பேன்.
தென் மண்டலத்தில் போதைப் பொருட்களுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொய்வின்றி தொடரும். காவல் துறையினருக்கு பெரிதும் உதவுபவர்கள் ஊடகத்துறையினர். சரியான தகவல்களை பரப்புவதும், தவறான தகவல்களை முடக்குவதும் தான் ஊடகத் துறையினரின் தலையாய பணி. அவர்களின் ஒத்துழைப்பு அவசியம். ஜாதிய மோதல்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Cq7YRgV
0 Comments