Crime

சென்னை: நிலம் வாங்கித் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

மயிலாப்பூர், தெற்கு மாட வீதியில் வசித்து வருபவர் ரவி (50). இவர் சொந்தமாக இடம் வாங்கி அதில் வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக நிலம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (46) என்பவரது அறிமுகம் ரவிக்கு கிடைத்துள்ளது. நிலம் வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதை உண்மை என நம்பி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகுமாரிடம் 2017 முதல் 2018 வரை சிறுக சிறுக என மொத்தம் ரூ.35 லட்சம் பணத்தை கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IQKA8Dq

Post a Comment

0 Comments