Crime

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். இறப்பதற்கு முன்னர் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் (சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர்) மருத்துவராக பணியாற்றி வந்தவர் கார்த்தி (42). இவர், சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் வீட்டில் தனி அறையில் வசித்து வந்தார். உறவினர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது வீட்டின் கதவு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/thkeU14

Post a Comment

0 Comments