
வேலூர்: வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் தாய்க்கு மயக்க மருந்து கொடுத்து பச் சிளம் ஆண் குழந்தையை கடத்திச் சென்ற தம்பதியை தனிப் படை காவல் துறையினர் காஞ்சிபுரத்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ண மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு கருத்தடை அறுவை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hpbVk7E
0 Comments