Crime

தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மிதந்தது. கடையநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்பெண்ணின் கையில் எம்.வி. என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் பகுதியைச் சேர்ந்த வினோதினி(21) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை, கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த மனோ ரஞ்சித்(22) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YVncx4C

Post a Comment

0 Comments