
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரை சேர்ந்தவர் மணி(26). இவர் வள்ளுவர் கோட்டம் அருகே காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடையில் கடந்த 2 மாதங்களாக மர்ம நபர்கள் யாரோ கள்ள நோட்டுகளை கொடுத்து மாற்றி வந்ததை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்த மணி, கடைக்கு வருவோரை கண்காணித்து வந்துள்ளார்.
அப்போது, அவரது கடையில் ரூ.500 கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பள்ளிக்கரணையை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அண்ணாமலை (64) என்பவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். அவரிடம் போலீஸார் விசாரித்ததில், விருகம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் (52) என்பவர் அறிவுறுத்தலின் பேரில் தான் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4PjdA6T
0 Comments