Crime

சென்னை: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகரை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ் (44). பிரபல ரவுடியான இவர் மீது, வழக்கறிஞர் பகத்சிங் மற்றும் ரவுடிகள் ராதாகிருஷ்ணன், புளியந்தோப்பு சின்னா கொலை உட்பட 7 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி வழக்குகள் என 38-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. கூலிப்படை தலைவனாகவும் செயல்பட்டு, ஏ பிளஸ் ரவுடி பட்டியலில் இருந்த இவர், 15 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LouZDsg

Post a Comment

0 Comments