Crime

விருதுநகர்: கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விருதுநகர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இம்மாதம் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த தனது கூட்டாளியான செந்தில் (47) என்பவரை சுட்டு கொலை செய்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டார். அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி. கருண்கரட் தலைமையிலான தனிப்படை போலீஸார் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர். 2 நாட்கள் விசாரணைக்குப் பிறகு சாத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் வரிச்சியூர் செல்வம் அடைக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bgPuRGX

Post a Comment

0 Comments