
திருப்பூர்: திருப்பூர் அருகே கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து சிறுமிக்கு மாத்திரை வழங்கிய மருந்தகத்துக்கு அதிகாரிகள் ‘சீல் ’ வைத்தனர்.
திருப்பூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில், கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்டதால், சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/qBYbiU0
0 Comments