
கோவை: கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை வீதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (60). பால் வியாபாரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் தொகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
புகாரின் பேரில் சிங்கா நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்ததில், ஒரு பெண் சதா சிவம் வீட்டுக்குள் நுழைவது தெரியவந்தது. விசாரணையில், அவர் கரூர் மாவட்டம் வெங்கமேட்டைச் சேர்ந்த தர்ம ராஜ் மனைவி ரமணி (33) என்பதும், கோவை கணபதியைச் சேர்ந்த வினையா (33) என்பவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JXolgVm
0 Comments