Crime

கோவை: 76 ஆயிரம் பேரிடம் ரூ.1,016 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக, நிதி நிறுவன மேலாண் இயக்குநரின் பெற்றோர் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவை பீளமேட்டில் யு.டி.எஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. இந்நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சூலூரைச் சேர்ந்த ரமேஷ்(30) ஆவார். இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு, அதிக வட்டி தரப்படும் என 4 பிரிவுகளின் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை நம்பி கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள், கேரளா மாநிலத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bDtQXax

Post a Comment

0 Comments