
கமுதி: கமுதி அருகே காதலித்து திருமணம் செய்ய மறுத்தவரை, 20 ஆண்டுகளுக்கு பின் அரிவாளால் வெட்டிய பெண் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆரப்பத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமாணிக்கம் மகன் மாணிக்கம் (45). அதே ஊரைச் சேர்ந்த செல்லையா மகள் கிரேஸ் (43). உறவினர்களான இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தனர். ஆனால், மாணிக்கம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால், அவ்வப்போது மாணிக்கம் குடும்பத்தாருடன் கிரேஸ் சண்டையிட்டு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5IS17a2
0 Comments