
கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட அலுவலகத்தின் பீரோ, பூட்டுகள் உடைத்திருப்பது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் சாந்தி நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலுள்ள 2 தளங்களில் இஸ்லாமியர்கள் தினந்தோறும் 5 வேளை தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையும், ஜமாத் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், அதிகாலை அந்த அலுவலகத்தில் தொழுகையில் ஈடுபட வந்த இஸ்லாமியர்கள், அங்கு பூட்டுகள் உடைத்திருப்பது அறிந்து, நிர்வாகிகளுக்கு தகவலளித்ததின் பேரில் அங்கு இஸ்லாமியர்கள் திரண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/EqrWKeQ
0 Comments