
சென்னை: ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்காமல் இருக்க மதுபோதை வாகனஓட்டியிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட மெரினா போலீஸார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மெரினா பகுதியில் மெரினா காவல் நிலைய போலீஸார் வெங்கடேஷ், யுவராஜ் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தள்ளாடியபடி இருந்தார். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார், அவரை மது போதையை கண்டறியும் ‘பிரீத் அனலைசர்’ கருவியில் ஊதவைத்தனர். இதில், அந்த வாகன ஓட்டி மது அருந்தியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BNyQVSv
0 Comments