
புதுச்சேரி: புதுச்சேரியில் கடத்தப்பட்ட 2 மாத ஆண் குழந்தை கடந்த 9 நாட்களுக்குப் பிறகு பெங்களூருவில் மீட்கப்பட்டது. குழந்தையை கடத்தியதாக தம்பதி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மனைவி சோனியா. இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சோனியா விளையாட்டுப் பொருள்களை விற்று வருகிறார். இதற்கிடையே கடந்த 27-ம் தேதி இரவு சோனியா மிஷன் வீதியில் உள்ள தனியார் பூச் செண்டு விற்பனை செய்யும் கடையின் வாசலில் தனது 2 மாத குழந்தை ஆதித்யாவுடன் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு விழித்து பார்த்தபோது குழந்தை ஆதித்யாவைக் காணவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/or0BCk6
0 Comments