Crime

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் செலவுக்கு பணம் தராததால் ஓய்வு பெற்ற அரசு ஊழியரான அக்கா மற்றும் ஆசிரியரான அக்கா கணவரை கொலை செய்த தம்பிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் சவுண்டியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் சோலைமலை. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு குழந்தை இல்லை. சோலைமலை கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். சரோஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சரோஜாவின் தம்பியான திருவாரூர் மாவட்டம் மருதுபட்டிணம் பகுதியை சேர்ந்த துரையரசன்(52) என்பவர் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவர் தனது அக்கா சரோஜாவிடம் அடிக்கடி செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். அதற்கு சரோஜா பணம் தர மறுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HNKfQXg

Post a Comment

0 Comments