
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பட்டாளம்மன் கோயில் அருகே உள்ள காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் தீபக் ரவிச் சந்திரன், காமராஜ். இவர்களுக்கும், இதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.
இந்நிலையில், நேற்று மது போதையில் பிரபாகரன் வீட்டுக்குச் சென்று இருவரும் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து பிரபாகரனின் தங்கை ஹேமலதா அவசர போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தென்கரை போலீஸார் செந்தமிழன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0jtQkPq
0 Comments