
சென்னை: மது போதையில் போலீஸாரிடம் தகராறு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் 3 பேரை தனிப்படை அமைத்துபோலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வியாசர்பாடி காவல் நிலைய போலீஸார் 4 பேர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ‘ஏஏ’ சாலை மேட்டுப்பாளையம் சுரங்கப்பாதை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RUTBKjO
0 Comments