
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நேற்று டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார் எதிர்திசையில் வந்த அரசுப் பேருந்து மீது மோதியதில், காரில் வந்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பேருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததில் நடத்துநர் உட்பட 43 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கே.உடையாப்பட்டியை சேர்ந்த டீ கடை உரிமையாளரான மணிகண்டன்(25), அதே பகுதியைச் சேர்ந்த 4 பேருடன், பழனி அருகே கணக்கம்பட்டி சித்தர் கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pR3GIon
0 Comments