
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே தண்டவாளத்தில் கான்கிரீட் கல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா என்று புலனாய்வு குழு வினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் காவேரி விரைவு ரயில் நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் ஆம்பூர் அருகே வந்து கொண்டிருந்தது. ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் அருகே வந்த போது, பாறாங்கல் மீது மோதியது போல பயங்கர சத்தம் கேட்டது. தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியபடி எழுந்து கூச்சலிட்டனர். ஓட்டுநர் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்து, பச்சக்குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/LYIZrhx
0 Comments