
கோவை: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்தவர் லட்சுமணராவ்.கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் தேஜஸ்வர் (15), ஆந்திராவில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறைக்காக தந்தை வீட்டுக்கு வந்துள்ளார்.
தேஜஸ்வர் நேற்று முன்தினம் செல்போனில் பேசியபடி அருகிலுள்ள கடைக்கு சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கத்தியால் தாக்கி அவரது செல்போனை பறித்துச் சென்றனர். காயமடைந்த தேஜஸ்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ch56pr0
0 Comments