
விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மதுபானம், போதைப் பொருட்கள் கடத்திச் செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் 9 மதுவிலக்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதுச்சேரி அருகே சின்ன முதலியார்சாவடி சோதனைச்சாவடியில் கோட்டக் குப்பம் மதுவிலக்கு உதவி காவல் சார்பு ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தமிழக அரசுப் பேருந்தில் சோதனைசெய்தனர். அப்போது பையுடன்
அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேருந்தைவிட்டு இறங்கி பையுடன் ஓடினார். அவரைபோலீஸார் விரட்டிப் பிடித்து, அவரிடம் இருந்து பாலித்தீன் பையில் கட்டப்பட்ட 5 பொட் டலங்களில் இருந்து பவுடரை பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xB4QaZl
0 Comments