
சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்,தனது காதலியுடன் கடந்த 3-ம் தேதிமெரினா கடற்கரைக்கு சென்றார்.பின்னர், வீடு திரும்புவதற்காக சர்வீஸ் சாலையில் நிறுத்தியிருந்ததனது இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது, அருகில் இருந்த 2 சக்கர வாகன உரிமையாளருடன் தகராறு ஏற்பட்டது.
அருகிலிருந்தவர் தனது நண்பர்கள் 4 பேரை வரவழைத்து, இளைஞரையும், அவரது காதலியையும் தாக்கினார். சப்தம் கேட்டுவந்த, ஆயுதப்படை பெண் காவலர் கலா தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டார். இதனால்,பெண் காவலரை அந்த இளைஞர்கள் தள்ளி விட்டு, 3 இருசக்கர வாகனங்களில் தப்பினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L3KcxfH
0 Comments