Crime

தருமபுரி: தருமபுரியில் கடன் பிரச்சினை மற்றும் தொழில் நஷ்டத்தால் ஆன்லைனில் தகவல் திரட்டி, நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நல்லம்பள்ளி வட்டம் பழைய குவாட்ரஸ் கோவிந்த சாமி கவுண்டர் தெருவில் வசிப்பவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனிவேல் (72). இவர் மனைவி சாந்தி ( 56). இவர்களின் மகன் விஜய் ஆனந்த் (35). பொறியியல் பட்டதாரியான விஜய் ஆனந்த் போட்டித் தேர்வுகளுக்கு முயன்றும் பணி கிடைக்காததால் நண்பர்களுடன் இணைந்து ஈரோடு மாவட்டம் நசியனூர் பகுதியில் நூல் மில் ஒன்றை குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TVlNjmn

Post a Comment

0 Comments