
விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் மகள் ஜெயஸ்ரீ(15). அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். 2020 மே 9-ம் தேதி ஜெயஸ்ரீ வீட்டில் தனியே இருந்தபோது, திடீரென வீட்டுக்குள் இருந்து புகை வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் ஜெயஸ்ரீ கதறிக் கொண்டிருந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு வந்த விழுப்புரம் நீதிபதியிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் (எ) முருகையன் (51), யாசகம் (எ) கலியபெருமாள் (60) ஆகியோர், முன்விரோதம் காரணமாக தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/urBA3Db
0 Comments