
சேலம்: சேலம் அருகே ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 பேரை தேடி வருகின்றனர்.
சேலம் அருகே உள்ள ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் இரு தரப்பினர் மோதிக்கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் துறையினர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 2 தரப்பினர் பேக்கரி முன்பு வாய் தகராறு செய்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மீண்டும் தகராறு செய்து
கொண்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sm9VfH8
0 Comments