
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி, லாலாப் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே கொடியேற்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வாலாஜா மேற்கு ஒன்றிய திமுக செயலாளருமான அக்ராவரம் முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, லாலாப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் கோகுலன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் அங்கு வந்தனர். அப்போது, இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jr8KDXd
0 Comments