Crime

திருப்பதி: திருப்பதி அருகே கார்களில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 9 பேரை திருப்பதி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பதி எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின்பேரில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு, கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக பெருமளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Vrg6Ofl

Post a Comment

0 Comments