
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களில் பதிவான 158 திருட்டு, கொள்ளை வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய 124 பேர் கைது செய்யப்பட்டு ரூ.38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் இன்று அளித்த பேட்டியில், "விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 3 கொள்ளை வழக்குகள், 20 வழிப்பறி வழக்குகள், 135 திருட்டு வழக்குகள் என 158 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிமிருந்து ரூ.38.13 லட்சம் மதிப்பிலான 127 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சிவகாசியில் கடந்த வாரம் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிமிருந்து 21.5 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z8eAZmU
0 Comments