
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவை சேர்ந்தவர் கர்ணா (26). இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதி சன்னியாசிபுரம் பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த 5 பேர் கும்பல் திடீர் தாக்குதல் நடத்தி கொலை செய்து விட்டு தப்பியது.
தகவல் அறிந்து தலைமைச் செயலக காலனி காவல் நிலையபோலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் துப்பு துலக்கினர். இதில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை அயனாவரம், புதுநகரைச் சேர்ந்த அர்ஜூன் (23) தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qdoWAf
0 Comments