
விருதுநகர்: ரயிலில் கடத்தி வரப்பட்ட 15 கிலோ கஞ்சாவை விருதுநகரில் போலீஸார் இன்று மாலை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து சனிக்கிழணை குருவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் திருச்சி வந்தபோது எஸ்-1 கோச்சில் வந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒரு டிராவல் பேக் கொண்டு வந்துள்ளார். இந்த பேக்கை மிகவும் பாதுகாப்பாகவும், போலீஸார் ரோந்து சுற்றி வரும்போது மறைத்து வைத்தும் பயணித்துள்ளார். இதைக் கண்காணித்த சக பயணிகள் ரயில்வே காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7R6kfb0
0 Comments