
சேலம்: சேலத்தில் பெண்ணின் ஆதார் கார்டைக் கொண்டு போலி ஆவணம் தயாரித்து முறைகேடு செய்த தனியார் தொலைத்தொடர்பு நிறுவன விநியோகிப்பாளரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இளம்பெண் மாவட்ட சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகார் மனுவில், எனது பெயரிலான ஆதார் கார்டு எண்ணை வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து போலியாக ஆவணம் தயாரித்து சிம்கார்டுகள் விற்பனை செய்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் கைலாசம் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C5O9niX
0 Comments