
தருமபுரி: தருமபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் பகுதியில் மருத்துவம் பயிலாமல் கிளினிக் நடத்திய 2 போலி மருத்துவர்களை போலீஸார் இன்று(மே 26) கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் பி.அக்ரஹாரம் பகுதியில் மருத்துவக் கல்வி பயிலாமல் 2 பேர் கிளினிக் நடத்தி வருவதாகவும், அங்கு அலோபதி முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் உத்தரவின்பேரில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் அருண்பிரசாத் தலைமையிலான குழுவினர் இன்று பி.அக்ரஹாரம் பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/snI2XhZ
0 Comments